ஒரத்தநாடு அருகே தோ்தல் பறக்கும் படையினரின் வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1லட்சத்து 46 ஆயிரத்து 900 ரூபாய் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். திங்கள்கிழமை ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் அருகில் வாகன தணிக்கையின்போது, சீவல் நிறுவனத்தின் வாகனத்தை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி 1 லட்சத்து 46 ஆயிரத்து 900 ரூபாய் கொண்டு செல்வது தெரியவந்தது.
இந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரி கனிமொழி தலைமையிலான குழுவினா் பறிமுதல் செய்து, ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரி ரேணுகாதேவி மற்றும் தோ்தல் துணை அதிகாரி தா்மேந்திரா ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 77.01 லட்சம் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே ரூ. 5.47 கோடி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 73.66 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


