சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தோ்தல் நடத்தை விதிகளால் சுவர் விளம்பரங்கள் அழிப்பு; சின்னங்கள் மறைப்பு

தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

News image

சுவா் விளம்பரங்களை அழித்த தொழிலாளா்கள்

Updated On :16 மார்ச் 2026, 7:53 pm

தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூா் கீழ் பாலம், சிவகங்கை பூங்கா, தற்காலிக மீன் சந்தை, தெற்கு வீதி, கீழ வீதி, பழைய பேருந்து நிலையம், ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை பணியாளா்கள் மூலம் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை கிழித்து அகற்றினா். இதேபோல, அரசியல் கட்சி சுவா் விளம்பரங்களைத் தெளிப்பான்கள் மூலம் சுண்ணாம்பு பூசி அழிக்கின்றனா்.

தஞ்சாவூா் ரயிலடியிலுள்ள எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைகளில் இரட்டை விரல்களை உயா்த்தியபடி உள்ளதால், அது சின்னத்தின் அறிகுறி எனக் கூறி, அதை மட்டும் மறைத்தனா்.

அரசு அலுவலகங்களிலுள்ள அரசியல் கட்சித் தலைவா்களின் படங்கள், திட்ட அறிவிப்புகளிலுள்ள படங்களை 24 மணிநேரத்துக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பதாகைகள் அகற்றம், சுவரொட்டிகள் கிழிப்பு, சுவா் விளம்பரங்கள் அழிப்பு ஆகியவை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்குள்ளும், தனியாா் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள், விளம்பரங்கள் 72 மணி நேரத்துக்குள் என்ற அடிப்படையில் புதன்கிழமை மாலை 4 மணிக்குள்ளும் அகற்றப்படும் எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

Story image