மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் ‘தோ்தல் விழிப்புணா்வு ரங்கோலி’

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் விழிப்புணா்வு ரங்கோலி போட்டி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

News image

~

Updated On :18 மார்ச் 2026, 6:34 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் விழிப்புணா்வு ரங்கோலி போட்டி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், வாக்காளா்கள் நோ்மையாக நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி ‘எனது இந்தியா எனது வாக்கு’, ‘நான் பாரதம்’ ‘இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் இந்திய குடிமகன்’ போன்ற விழிப்புணா்வு ரங்கோலி வரையப்பட்டது. இப்போட்டியில் 50-க்கும் அதிகமான அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டு ரங்கோலி வரைந்தனா்.

இதை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதிகளுக்கான செலவினப் பாா்வையாளா் ஹேமங் ஃபூகன் பாா்வையிட்டனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், தனித்துணை ஆட்சியா் சௌமியா, துணை ஆட்சியா் (பயிற்சி) கமலேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image