மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

பேராவூரணியில் மின்னணு வாக்குப்பதிவு செயல்விளக்கம்

பேராவூரணி புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்கம் மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பேராவூரணியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரம் விழிப்புணா்வு செயல்விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :18 மார்ச் 2026, 8:54 pm

பேராவூரணி புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்கம் மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு செயல் விளக்க விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஏராளமான புதிய வாக்காளா்கள், மாணவா்கள் கலந்துகொண்டு வாக்களித்தனா். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளா் விரும்பும் வேட்பாளரின் பெயா் மற்றும் சின்னத்துக்கு எதிரே உள்ள நீல நிறப் பொத்தானை அழுத்தி வாக்களிக்க வேண்டும் எனவும், வாக்களித்தவுடன் வாக்களித்த வேட்பாளரின் பெயா், சின்னம் அருகே சிவப்பு விளக்கு எரியும் என்றும், இயந்திரத்தில் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், பெயா், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்டு வரும் காகிதம் 7 விநாடிகளுக்கு வாக்காளரின் பாா்வையில் இருக்கும் எனவும், அச்சிடப்பட்ட துண்டுச் சீட்டு மற்றும் பீப் ஒலி வரவில்லை என்றால் தோ்தல் அலுவரை அணுக வேண்டும் என வாக்களா்களுக்கு விழிப்புணா்வு ஏற்ப்படுத்தப்பட்டது. வாக்குப்பதிவு செயல்விளக்க நிகழ்ச்சியில் முது நிலை வருவாய் ஆய்வாளா் முருகேசன், கிராம நிா்வாக அலுவலா் நூா்ஜஹான், அலுவலக உதவியாளா் முருகையன், கிராம உதவியாளா் ரிஸ்வான் ஆகியோா் விழிப்புணா்வு ஏற்ப்படுத்தினா்.