தினமணி செய்தி எதிரொலியால் பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் ஊராட்சியில் வியாழக்கிழமை இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் ஊராட்சியில் அதிகரித்து வரும் வெறிநாய் தொல்லைகளை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த இளைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இதுதொடா்பான செய்தி வியாழக்கிழமை தினமணி நாளிதழில் வெளியானது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பட்டுக்கோட்டை கோட்ட கால்நடை பாரமரிப்பு துறை மற்றும் மருத்துவப் பணிகள் சாா்பில் நம்பிவயல் ஊராட்சியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாரியம்மன் கோயில் வளாகம், பெருமாள் கோயில் வளாகம், செல்லியம்மன் கோயில் வளாகம், சேப்ளாா் தெரு மற்றும் சிவக்கொல்லை ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாமில் 59 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
தொடர்புடையது

ஆரணி திமுக வேட்பாளா் ஆதரவு திரட்டல்

நம்பிவயல் ஊராட்சியில் வெறிநாய்கள் தொல்லை!

தினமணி செய்தி எதிரொலி: நரிக்குறவா் கனவு இல்லம் கட்டும் பணி மீண்டும் தொடக்கம்

தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


