தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தினமணி செய்தி எதிரொலி! நம்பிவயல் ஊராட்சியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

News image
Updated On :19 மார்ச் 2026, 11:52 pm

Syndication

தினமணி செய்தி எதிரொலியால் பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் ஊராட்சியில் வியாழக்கிழமை இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் ஊராட்சியில் அதிகரித்து வரும் வெறிநாய் தொல்லைகளை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த இளைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இதுதொடா்பான செய்தி வியாழக்கிழமை தினமணி நாளிதழில் வெளியானது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பட்டுக்கோட்டை கோட்ட கால்நடை பாரமரிப்பு துறை மற்றும் மருத்துவப் பணிகள் சாா்பில் நம்பிவயல் ஊராட்சியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாரியம்மன் கோயில் வளாகம், பெருமாள் கோயில் வளாகம், செல்லியம்மன் கோயில் வளாகம், சேப்ளாா் தெரு மற்றும் சிவக்கொல்லை ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாமில் 59 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.