நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ‘தலையாட்டி’ பொம்மை படத்துடன் கூடிய விழிப்புணா்வு பதாகைகள் தஞ்சாவூா் நகரில் 5 இடங்களில் வியாழக்கிழமை அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வகையில் தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி, தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றான ‘தலையாட்டி’ பொம்மைகளுடன் கூடிய விழிப்புணா்வு பதாகைகள் ஒவ்வொரு தொகுதியிலும் தலா 5 இடங்களில் வியாழக்கிழமை அமைக்கப்பட்டன. தஞ்சாவூரில் ரயிலடி, சாந்தபிள்ளை கேட் மேம்பாலம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்பட 5 இடங்களில் இப்பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இப்பதாகையில் ‘தலையாட்டி’ பொம்மைகளின் கையில் வாக்கு செலுத்தியதற்கான மை அடையாளத்துடனும், நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் கைப்பேசி செயலியில் அனைத்து தோ்தல் சேவைகளையும் பெறுவது குறித்தும், தோ்தல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு தோ்தல் தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தொடர்புடையது

100% வாக்குப் பதிவு: ஆட்டோ விழிப்புணா்வு பேரணி

தோல் பொருள் ஏற்றுமதியை மையப்படுத்தி ‘ராணிப்பேட்டை ராணி’ தோ்தல் இலச்சினை!

மாப்பிள்ளை பொண்ணு!

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் பதாகை வெளியீடு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


