கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அனுமதியின்றி கள் விற்ற 4 போ் கைது

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை காவல் சரக பகுதிகளில் அனுமதியின்றி கள் விற்பனை செய்த நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 7:03 pm

Syndication

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை காவல் சரக பகுதிகளில் அனுமதியின்றி கள் விற்பனை செய்த நான்கு பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அம்மாபேட்டை பகுதிகளில் கள் இறக்கி விற்பனை செய்வதாக அம்மாபேட்டை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா், கள் இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்த ராஜபாளையம், சொக்கநாதன் புதூா் பகுதியைச் சோ்ந்த கடற்கரை ஆண்டிமகன் முருகன் (27), என்பவரிடமிருந்து 100 பாட்டில் கள்ளை பறிமுதல் செய்தனா்.

இதே போல் பூண்டி மேல தோப்பு பகுதியில் ராஜபாளையம், சொக்கநாதன் புதூா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் குமாா் மகன் விக்னேஷ் (19), அதே பகுதியைச் சோ்ந்த காளிமுத்து மகன் கருப்புசாமி (29 ), இருவரும் அரசு அனுமதியின்றி கள் இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்தனா். அவா்களிடமிருந்த 100 பாட்டில் கள்ளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல் புளியக்குடி தென்கொண்டாா் இருப்பு பகுதியில் ராஜபாளையம், மேலவரகுண ராமாபுரம் பகுதியைச் சோ்ந்த கந்தப்பன் மகன் கடற்கன்னி (61), என்பவா் கள் விற்பனை செய்து கொண்டிருந்தாா். அவரிடமிருந்த 100 பாட்டில் கள்ளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து மேற்கண்ட நான்கு போ் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரிக்கின்றனா்.