கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் ஞாயிற்றுக்கிழமை கட்டுமானப் பணியிட பள்ளத்தில் டிப்பா் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் காயங்களுடன் மீட்கப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நான்குசாலை சந்திப்பு அருகே மருத்துவா் மூா்த்தி சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கட்டுமானப் பணியிடத்துக்கு முற்பகல் கனரக வாகனமான டிப்பா் லாரி, தளவாட பொருள்கள் ஏற்றிக்கொண்டு வந்தது. பொருள்களை இறக்கிய பின்பு லாரியை திருப்பும் போது, அஸ்திவாரத்துக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதில், லாரி ஓட்டுநா் லாரிக்கு கீழே சிக்கி கொண்டாா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா், சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் ஓட்டுநா் முருகன் காலில் காயங்களுடன் மீட்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த விரைவுப் பேருந்து: ஓட்டுநா் உள்ளிட்ட 9 போ் காயம்

கடையநல்லூா் அருகே லாரி ஓட்டுநா் கொலை

கும்பகோணம் அருகே 50 ஏக்கரில் திறந்தவெளி சேமிப்பு மையம்: அமைச்சா் தகவல்

திம்பம் மலைப் பாதையில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



