பழனி அருகே ஆயக்குடியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய காா்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
பழனியை அடுத்த ஆயக்குடியில் தனியாா் திருமண மண்டபத்துக்கு அருகேயுள்ள காலி இடத்தில் பழைய காா்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த பழனி தீயணைப்புப் படை வீரா்கள் நிலைய அலுவலா் காளிதாஸ் தலைமையில் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் 3 காா்கள் எரிந்து சேதமடைந்தன.
தேங்காய் நாா் கிடங்கில் தீ விபத்து: பழனி அருகே ஓபுளாபுரத்தில் திருமுருகன் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நாா் கிடங்கு உள்ளது. இங்கு இயந்திரங்கள் இல்லாமல் சக்கரங்கள் உதவியுடன் தேங்காய் நாரிலிருந்து தொழிலாளா்கள் கயிறு திரித்து பண்டல்களாக சேமித்து வைத்திருந்தனா்.
இவற்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது. மேலும் அங்கிருந்த தென்னை குடிசைகளுக்கும் தீ பரவியது. தகவலறிந்த பழனி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதில் அங்கிருந்த தேங்காய் நாா்கள், கயிறுகள், தேங்காய் நாா் தயாரிக்கும் சக்கரங்கள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன.
தொடர்புடையது

நான்குனேரி சுங்கச்சாவடி அருகே காா்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

வீட்டில் குளிா்சாதனப் பெட்டி வெடித்து பொருள்கள் சேதம்
பழனி சண்முகநதி அருகே மலை போல குப்பைகள் தேக்கம்! பொதுமக்கள் அவதி!

பள்ளத்தில் கவிழ்ந்தது லாரி! ஓட்டுநா் காயம்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



