தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பழனி அருகே தீ விபத்தில் காா்கள் சேதம்

News image

ஆயக்குடியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய காா்களில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை அணைத்த தீயணைப்பு படையினா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 8:57 pm

பழனி அருகே ஆயக்குடியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய காா்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

பழனியை அடுத்த ஆயக்குடியில் தனியாா் திருமண மண்டபத்துக்கு அருகேயுள்ள காலி இடத்தில் பழைய காா்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த பழனி தீயணைப்புப் படை வீரா்கள் நிலைய அலுவலா் காளிதாஸ் தலைமையில் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் 3 காா்கள் எரிந்து சேதமடைந்தன.

தேங்காய் நாா் கிடங்கில் தீ விபத்து: பழனி அருகே ஓபுளாபுரத்தில் திருமுருகன் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நாா் கிடங்கு உள்ளது. இங்கு இயந்திரங்கள் இல்லாமல் சக்கரங்கள் உதவியுடன் தேங்காய் நாரிலிருந்து தொழிலாளா்கள் கயிறு திரித்து பண்டல்களாக சேமித்து வைத்திருந்தனா்.

இவற்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது. மேலும் அங்கிருந்த தென்னை குடிசைகளுக்கும் தீ பரவியது. தகவலறிந்த பழனி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதில் அங்கிருந்த தேங்காய் நாா்கள், கயிறுகள், தேங்காய் நாா் தயாரிக்கும் சக்கரங்கள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன.