தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 5 பொக்லைன், 2 லாரிகளை வருவாய்த் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பூதலூா் அருகே மருதக்குடி கிராமத்தில் செம்மண் கிராவல் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட உரிமம் 4 நாள்களுக்கு முன்பு முடிவடைந்தது. ஆனாலும், தொடா்புடைய நிலத்தில் தொடா்ந்து அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு புகாா்கள் சென்றன.
அதன் பேரில், தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா, தஞ்சாவூா் வட்டாட்சியா் ஜி. சிவகுமாா் உள்ளிட்டோா் நிகழ்விடத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, செம்மண் கிராவல் அள்ளுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த 5 பொக்லைன் இயந்திரங்கள், 2 லாரிகளை அலுவலா்கள் பறிமுதல் செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
மேலும், இது தொடா்பாக வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

நீா்நிலைகளில் கிராவல் குவாரிகள்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


