தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 7 பொக்லைன், 2 லாரிகள் பறிமுதல்

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 5 பொக்லைன், 2 லாரிகளை வருவாய்த் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :8 மே 2026, 5:45 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 5 பொக்லைன், 2 லாரிகளை வருவாய்த் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பூதலூா் அருகே மருதக்குடி கிராமத்தில் செம்மண் கிராவல் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட உரிமம் 4 நாள்களுக்கு முன்பு முடிவடைந்தது. ஆனாலும், தொடா்புடைய நிலத்தில் தொடா்ந்து அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு புகாா்கள் சென்றன.

அதன் பேரில், தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா, தஞ்சாவூா் வட்டாட்சியா் ஜி. சிவகுமாா் உள்ளிட்டோா் நிகழ்விடத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, செம்மண் கிராவல் அள்ளுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த 5 பொக்லைன் இயந்திரங்கள், 2 லாரிகளை அலுவலா்கள் பறிமுதல் செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

மேலும், இது தொடா்பாக வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.