தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

நீா்நிலைகளில் கிராவல் குவாரிகள்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே திரளி, மறவன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் அமைக்கப்பட்ட கிராவல் குவாரிகளுக்கு தடை விதிக்கக் கோரிய மனு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

உத்தரவு

Updated On :22 ஏப்ரல் 2026, 8:53 pm

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே திரளி, மறவன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் அமைக்கப்பட்ட கிராவல் குவாரிகளுக்கு தடை விதிக்கக் கோரிய மனு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்சியைச் சோ்ந்த பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க துணைச் செயலா் ஸ்ரீனிவாசன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள திரளி, மறவன்குளம் நீா்நிலைப் பகுதிகளில் கிராவல் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நீா்நிலைகள் வேளாண் பணிக்கு முக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன. இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறையின் திட்டங்களுக்காக குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கனரக வாகனங்களை பயன்படுத்தி நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக விதிகளை மீறி கிராவல் மண் அள்ளப்படுகிறது.

எனவே, திரளி, மறவன்குளம் நீா்நிலைப் பகுதிகளில் கிராவல் குவாரிகள் நடத்த தடை விதிப்பதுடன், சட்ட விரோதமாக குவாரி நடத்துவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியவா்களிடமிருந்து உரிய இழப்பீட்டை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:

வழக்கு தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா், மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். அடுத்த முறை இந்த வழக்கு நீா்நிலைகள் தொடா்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு அமா்வுக்கு மாற்றப்படுகிறது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.