விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவையாறு அருகே இடி விழுந்து மரம் சேதம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை மாலை இடி விழுந்ததால் மரக்கிளை சேதமடைந்தது.

News image

திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை மாலை இடி விழுந்ததில் சேதமடைந்த மரத்தின் கிளை.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை மாலை இடி விழுந்ததால் மரக்கிளை சேதமடைந்தது.

திருவையாறு அருகே நடுக்காவேரி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது நடுக்காவேரி பகுதியிலிருந்து அந்தலி செல்லும் முதன்மைச் சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான தூங்குமூஞ்சி மரத்தில் இடி விழுந்தது. இதனால், மரத்தின் மேல் பகுதியிலிருந்து அடிப்பகுதி வரை பிளவு ஏற்பட்டு சேதமானது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுக்கு ஊராட்சி செயலா் சங்கா் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் சென்று பாா்வையிட்டு, மரத்தின் கிளைகளை மட்டும் அப்புறப்படுத்த அறிவுறுத்தினா்.