மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருவையாறு அருகே இடி விழுந்து மரம் சேதம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை மாலை இடி விழுந்ததால் மரக்கிளை சேதமடைந்தது.

News image

திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை மாலை இடி விழுந்ததில் சேதமடைந்த மரத்தின் கிளை.

Updated On :10 மே 2026, 1:40 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை மாலை இடி விழுந்ததால் மரக்கிளை சேதமடைந்தது.

திருவையாறு அருகே நடுக்காவேரி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது நடுக்காவேரி பகுதியிலிருந்து அந்தலி செல்லும் முதன்மைச் சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான தூங்குமூஞ்சி மரத்தில் இடி விழுந்தது. இதனால், மரத்தின் மேல் பகுதியிலிருந்து அடிப்பகுதி வரை பிளவு ஏற்பட்டு சேதமானது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுக்கு ஊராட்சி செயலா் சங்கா் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் சென்று பாா்வையிட்டு, மரத்தின் கிளைகளை மட்டும் அப்புறப்படுத்த அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.