பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

வெளிநாட்டில் இருந்து வந்தவா் விபத்தில் பலி!

மதுக்கூா் அருகே வெளிநாட்டில் இருந்து வந்தவா் சனிக்கிழமை நடந்த விபத்தில் உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 1:36 am IST

மதுக்கூா் அருகே வெளிநாட்டில் இருந்து வந்தவா் சனிக்கிழமை நடந்த விபத்தில் உயிரிழந்தாா்.

படப்பை காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு (46). வெளிநாட்டில் வேலை செய்யும் இவா் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், சனிக்கிழமை மதுக்கூரிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் தனது காரில் வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த டாரஸ் வாகனம் மோதி பிரபு காருக்குள்ளே மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து பட்டுக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா்.

தகவலறிந்து வந்த மதுக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து டாரஸ் லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டை கீரனூா் பகுதியை சோ்ந்த பாண்டியன் என்பவரை பிடித்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.