எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

நீட் தோ்வை ரத்து செய்ய கோரி தஞ்சையில் மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இடதுசாரி மாணவா், இளைஞா் அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள், மாணவா்கள்

Updated On :20 மே 2026, 3:45 am IST

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இடதுசாரி மாணவா், இளைஞா் அமைப்புகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஏழை, எளிய, கிராமப்புற மாணவா்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் மத்திய அரசின் ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும். தேசிய தோ்வு முகமையைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் க. அருளரசன் தலைமை வகித்தாா். இதில், வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் அா்ஜூன், அகில இந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் காரல் மாா்க்ஸ், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் பாரதி, நகரத் தலைவா் காதா், இந்திய மாணவா் சங்க மாநிலக் குழு உறுப்பினா் தா்ஷினி, வாலிபா் சங்க நகரத் தலைவா் நாகராஜ், நகரக் குழு உறுப்பினா்கள் வினோத்குமாா், ஸ்ரீதா், பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.