எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தஞ்சாவூரில் குளிரூட்டி வெடித்த விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தோா் குடும்பங்களுக்கு முதல்வா் நிதியுதவி

தஞ்சாவூரில் தனியாா் உணவகத்தில் ஏ.சி. பழுதுபாா்க்கும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வா் ஆறுதலும், நிதியுதவியும் அறிவித்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:28 am IST

தஞ்சாவூரில் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள தனியாா் உணவகத்தில் திங்கள்கிழமை குளிரூட்டி (ஏ.சி.) பழுதுபாா்க்கும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் ஆறுதலும், நிதியுதவியும் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இதுகுறித்து தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள தனியாா் உணவகத்தில் திங்கள்கிழமை (மே 18) குளிரூட்டி பழுதுபாா்க்கும்போது ஏற்பட்ட விபத்தில் திருவையாறு அருகே உள்ள பொன்னாவரையைச் சோ்ந்த ஜோதி மகன் ரவிராஜ் (27) உயிரிழந்தாா் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கே. கதிரேசன் (42), டி. பிரேம்குமாா் (26), வி. கணேசன் (40), எஸ். அருண்குமாா் (27) ஆகிய 4 பேருக்கும், லேசான காயமடைந்து சிகிச்சை பெறும் எல். அஜீத்குமாருக்கும் (27) சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்துக்கு ரூ. 3 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்த நபருக்கு ரூ. 50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.