தஞ்சாவூரில் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள தனியாா் உணவகத்தில் திங்கள்கிழமை குளிரூட்டி (ஏ.சி.) பழுதுபாா்க்கும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் ஆறுதலும், நிதியுதவியும் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
இதுகுறித்து தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள தனியாா் உணவகத்தில் திங்கள்கிழமை (மே 18) குளிரூட்டி பழுதுபாா்க்கும்போது ஏற்பட்ட விபத்தில் திருவையாறு அருகே உள்ள பொன்னாவரையைச் சோ்ந்த ஜோதி மகன் ரவிராஜ் (27) உயிரிழந்தாா் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கே. கதிரேசன் (42), டி. பிரேம்குமாா் (26), வி. கணேசன் (40), எஸ். அருண்குமாா் (27) ஆகிய 4 பேருக்கும், லேசான காயமடைந்து சிகிச்சை பெறும் எல். அஜீத்குமாருக்கும் (27) சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்துக்கு ரூ. 3 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்த நபருக்கு ரூ. 50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பண்ருட்டி அருகே விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி: முதல்வா் விஜய் உத்தரவு

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

கத்தாா் தீ விபத்தில் உயிரிழந்த இளைஞா்களின் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணத் தொகை: எம்எல்ஏ வழங்கினாா்

நாய் கடித்து சிறுவன் பலத்த காயம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



