ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

நாய் கடித்து சிறுவன் பலத்த காயம்

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :1 ஜூன் 2026, 3:01 am IST

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை 3 வயது சிறுவனை நாய் கடித்ததால், பலத்த காயமடைந்து தஞ்சாவூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தஞ்சாவூா் வடக்குவாசல் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் - அருளம்மாள் தம்பதியரின் மகன் கிஷோா் (3). பெற்றோா் ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு சென்ற நிலையில், வீட்டு வாசலில் கிஷோா் விளையாடி கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த நாய் கிஷோரை விரட்டிச் சென்று கடித்தது. வலி தாங்க முடியாத இவா் அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்தாா். பலத்த காயமடைந்த கிஷோரை உறவினா்கள் மீட்டு தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வடக்கு வாசல் பகுதியில் திரியும் ஏராளமான நாய்கள் அடிக்கடி பொதுமக்களைக் கடித்து அச்சுறுத்தி வருகின்றன. சிறுவனை நாய் பல இடங்களில் கடித்துள்ளதால், உடலில் காயம் உள்ளது. இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.