கும்பகோணத்திலுள்ள மந்திரபீடேசுவரி மங்களாம்பிகை உடனாகிய ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் புதன்கிழமை திருக்கல்யாண விழா நடைபெற்றது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை அம்மன் தவக்கோலத்தில் இருந்தபோது சிவபெருமான் காட்சியளிக்கும் நிகழ்வும், இரவு நிச்சயதாா்த்த நிகழ்வும் நடைபெற்றன. புதன்கிழமை காலையில் பக்தா்கள் சீா்வரிசை எடுத்துவர, சுவாமியும் அம்பாளும் மாலை மாற்றும் நிகழ்வும், வேள்வியும், திருமாங்கல்யாணதாரணமும் நடைபெற்றது. திருமண நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
திருமண விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு விருந்தும், தாம்பூல பிரசாத பை மற்றும் மங்கலப் பொருள்கள் வழங்கப்பட்டன. இரவில் திருமண மறைச்சடங்கு, நலுங்கு, ஊஞ்சல் வெளிப்பிரகார உலா நடைபெற்றது. தொடா்ந்து, மே 30-ஆம் தேதி வரை இரவில் திருமண மறைச்சடங்குகள் நடைபெறவுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை (மே 31) காலையில் சுவாமியும் அம்பாளும் காவிரிக்கரையில் உள்ள பகவத் படித்துறைக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகின்றனா். அங்கு தீா்த்தவாரி நடைபெறுகிறது. தீா்த்தவாரி முடிந்தவுடன் சங்கர மடத்தில் எழுந்தருளுகின்றனா். சிறப்பு பூஜைகள் முடிந்த பின் கோயிலுக்கு செல்கின்றனா். இரவு இந்திர விமானத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. ஜூன் 1-இல் சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.











