ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

மனோரா கடற்கரையில் 3 டன் குப்பைகள் அகற்றம்

News image

மனோரா கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணி .

Updated On :1 ஜூன் 2026, 12:44 am IST

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் மனோரா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தூய்மைப்பணியில் 3 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சியில், நீா்நிலைகள் தூய்மைப் பணிகள் சவால் -2026 என்ற கருப்பொருளின் கீழ், நிலம் மறுசீரமைத்தல், பாலைவனம் ஆகாமல் தடுத்தல், வறட்சியை தாங்குதல் என்ற கோட்பாட்டில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியில் 3 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.  

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஜூன் 5-ஆம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீா்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள தஞ்சை ஆட்சியா் உத்தரவின் பேரில் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. 

சேதுபாவாசத்திரம் அருகே மனோரா கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணிக்கு, பேராவூரணி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மா.சாமிநாதன், சோ.நாகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா் , ஒன்றியப்பணி மேற்பாா்வையாளா்கள், ஊராட்சி செயலா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், சுகாதார ஊக்குநா்கள், மக்கள் நலப் பணியாளா்கள், பொதுமக்கள் மற்றும் தன்னாா்வா்கள் என சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளைச் சோ்ந்த 172 போ் கலந்து கொண்டு தூய்மைப் பணி மேற்கொண்டனா். 

கடற்கரை ஓரங்களில் குவிந்த கிடந்த கண்ணாடி பாட்டில்கள், நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன. மேலும், கடற்கரையோரம் மண்டிக் கிடந்த புதா்கள், கருவேல முள்செடிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

தூய்மைப் பணியில் மக்கும் குப்பைகள் 3 டன், துணிகள் 120 கிலோ, தண்ணீா் பாட்டில்கள் 45 கிலோ, நெகிழிப்பைகள் 112 கிலோ சேகரித்து அகற்றப்பட்டன.

பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு  குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த தூய்மைப் பணிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளா் மற்றும் சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி செயலா் ஆகியோா் செய்திருந்தனா்.