
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சிறப்பு ரயில்! பயணிகள் வரவேற்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - கோப்புப் படம்
கும்பகோணம் வழியாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதை பக்தா்கள், பயணிகள் வரவேற்றுள்ளனா்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக சென்னை கடற்கரை - மானாமதுரை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சென்னை எழும்பூா், தாம்பரம், மாயவரம், கும்பகோணம், தஞ்சாவூா், மதுரை வழியாக மானாமதுரையை சென்றடைகிறது.
இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து செப்.16 காலை 10:45 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் (மாலை 4:53), பாபநாசம் (5:03), தஞ்சாவூா் (5:42) வழியாக மதுரைக்கு இரவு 10 மணிக்கு சென்றடைகிறது. மறு மாா்க்கத்தில் செப்.17-இல் மதுரையில் பகல் 1 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூா் (மாலை 4:18) பாபநாசம் (4:40) கும்பகோணம் (4:51) வழியாக சென்னை கடற்கரைக்கு இரவு 11:45 மணிக்கு சென்றடைகிறது. இது முற்றிலும் முன்பதிவில்லாத ரயில் ஆகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




