
பட்டா கோரி கிராம மக்கள் சாலை மறியல்
தஞ்சாவூா் அருகே அரசு வழங்கிய இடங்களுக்கு பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் அருகே வாண்டையாா் இருப்பு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
தஞ்சாவூா் அருகே அரசு வழங்கிய இடங்களுக்கு பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் அருகே கரைமீண்டாா் கோட்டை கிராமத்தில் பட்டியலினத்தைச் சோ்ந்த 15-க்கும் அதிகமான குடும்பங்களுக்கு அரசு சாா்பில் 2 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இது குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், அதிருப்தியடைந்த மக்கள் தஞ்சாவூா் - மன்னாா்குடி சாலையில் வாண்டையாா் இருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற ஒரத்தநாடு வட்டாட்சியா் அருள்மணி உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





