முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பதவி உயர்வு பெற்றுத் தருவதாக கூறி வி.ஏ.ஓ.விடம் ரூ.65 லட்சம் மோசடி: போலி  ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

பதவி உயர்வு பெற்றுத் தருவதாகக் கூறி கிராம நிர்வாக அலுவலரிடம் ரூ. 65 லட்சம் மோசடி செய்த போலி ஐ.ஏ.எஸ். அலுவலர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:54 am IST

பதவி உயர்வு பெற்றுத் தருவதாகக் கூறி கிராம நிர்வாக அலுவலரிடம் ரூ. 65 லட்சம் மோசடி செய்த போலி ஐ.ஏ.எஸ். அலுவலர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் ராஜூ. கிராம நிர்வாக அலுவலரான இவருக்கும்,  சென்னை தலைமைச் செயலகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றி வருவதாகக்  கூறி வந்த ஸ்ரீராமுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம்.  காரில் சுழலும் சிவப்பு விளக்குப் பொருத்தி வலம் வந்துள்ளாராம். 
தனக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் பழக்கம் இருப்பதாக ஸ்ரீராம் கூறியதை நம்பிய ராஜூ, தனக்குப் பதவி உயர்வு வாங்கித் தருமாறுக் கூறி, ரூ.65 லட்சத்தை பலதவணைகளில் தந்தாராம். ஆனால், அதன் பின்னர்தான், ஸ்ரீராம் போலி அதிகாரி என்பது தெரிய வந்தது.
இதையடுத்து கடந்தாண்டு ஜூலை மாதம், சிதம்பரம் காவல் நிலையத்தில் ராஜூ  அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.  இத்தகவலைத் தெரிந்த ஸ்ரீராம் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறினாலும்  பணம் தரவில்லையாம்.
இந்த நிலையில், திருச்சி கே.கே.நகரிலுள்ள தனது வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிச் செல்லுமாறு ஸ்ரீராம் கூறியதை நம்பி, ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜூ திருச்சி வந்தார்.  ஸ்ரீராம் வீட்டுக்குச் சென்ற போது,  ஸ்ரீராமும், அவரதுஉறவினர்களும் சேர்ந்து ராஜூவை அடித்து உதைத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜூ, சிகிச்சை பெற்ற பின்னர்,   மாநகரக் காவல் ஆணையர் ஏ. அமல்ராஜை திங்கள்கிழமை சந்தித்து,  புகார் அளித்தார். புகாரின் பேரில் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை மாலை வழக்குப்பதிந்து,  ஸ்ரீராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.