மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 27 லட்சம் தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 27 லட்சம் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:27 am

DIN

வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 27 லட்சம் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசியாவிலிருந்து சனிக்கிழமை நள்ளிரவு வந்த விமானப் பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது,  இருவரது உடைமைகள் இருந்த பெட்டியில் மர்மப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.  இதில்,  சென்னையைச் சேர்ந்த  சர்புதீன்அலி என்பவர் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 341 கிராம் தங்கக் கட்டிகளை கடத்தி வந்திருந்தார். மேலும், சென்னையைச் சேர்ந்த ஜமாலுதீன் என்பவர் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள  289 கிராம் தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்திருந்தார்.
அதேபோல், சிங்கப்பூரிலிருந்து வந்த விமானப் பயணிகளை சோதனை மேற்கொண்டதில், புதுக்கோட்டையைச் சேர்ந்த பால்பீட்டர் என்பவர் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 250 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. ஒரே நாளில் கடத்தி வரப்பட்ட ரூ. 27 லட்சம் மதிப்பிலான 780 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.