திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மாணவியர் பிரிவுக்கான 17ஆம் ஆண்டு விளையாட்டு விழாவில் மஞ்சள் நிற அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விளையாட்டு விழாவில், 22 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 1,500 மாணவியர் பங்கேற்றனர். இதில் 41 புள்ளிகளைப் பெற்ற மஞ்சள் நிற அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. முதலாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி ஆர். ஷோபனா தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தார். உதவி உடற்கல்வி இயக்குநர் கே.பிரதீப் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். சவுதி அரேபியா ஆல்பா சரக்கு சேவைகள் நிறுவனத்தின் வணிக மேம்பாட்டு மேலாளர் எம்.சிராஜூதீன் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர் ஏ.கே.காஜா நஜ்முதீன், பொருளாளர்எம்.ஜெ. ஜமால் முகமது, உதவிச் செயலர் அப்துல் சமது, உடற்கல்வி இயக்குநர் பி.எஸ்.ஷாயின்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








