தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையால் கேபிள் டிவி கட்டணம் பலமடங்கும் உயரும் அபாயம் இருப்பதாக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச்சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் பி. விஷ்ணுவர்த்தன் தலைமை வகித்தார்.
இதில், மாநில துணைத் தலைவர் ஜி. தாமோதரன் பேசியது: தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள டிஜிட்டலாக்கம் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. அதற்கு முன்பாகவே தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அலகார்ட் முறையை 2019 ஜனவரி முதல் அமல்படுத்தவுள்ளது.
மக்கள் விரும்பும் சேனல்களை விரும்பிய கட்டணத்தில் பார்ப்பதற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டாலும், தமிழகத்தில் அதற்கான அடித்தளம் இதுவரை முழுமையாக கட்டமைக்கப்படவில்லை. தற்போது 300-க்கும் மேற்பட்ட சேனல்களை அதிகபட்சம் ரூ.180 மாதக் கட்டணத்தில் கண்டுகளிக்கும் சூழல் உள்ளது.
டிஜிட்டலாக்கம் அமல்படுத்துவதற்கு முன்பாகவே அவசர கதியில் கொண்டுவரப்படும் அலகார்ட் முறையால் அதே 300 சேனல்களை பார்க்க வேண்டுமெனில் கேபிள் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொருவரும் மாதம் ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும். இதுமட்டுல்லாது இந்த கட்டணத்துக்கு மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியாக ரூ.144 (18 சதவீதம்) செலுத்த வேண்டும். மாதம் ஒன்றுக்கு மொத்தமாக கேபிள் இணைப்புக்கு ரூ.944 செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.
இது பொதுமக்களுக்கு மட்டுமில்லாது கேபிள் தொழில் நடத்தும் ஆபரேட்டர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அலகார்ட் முறையில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், சங்க மாவட்டத் தலைவர் பி. நாகராஜ், மாவட்ட பொருளாளர் ஜி. வெங்கடேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தொழிலை புனரமைக்க தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
முத்ரா வங்கி கடன் திட்டத்தின் கீழ் 50 மானியத்தில் தலா ரூ.2 லட்சம் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், திருச்சி, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், திருவரங்கம், மணப்பாறை, தொட்டியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமாதானத் தூதராக உருவெடுத்துள்ளது பாகிஸ்தான்: ஷெபாஸ் ஷெரீஃப் பெருமிதம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாட வேண்டும்: ஸ்மிருதி மந்தனா

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!





