டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் அதிரடியாக விளையாட வேண்டும் என ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அதன் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகப் பெரிய ஆட்டத்தில் விளையாடவுள்ளோம். நாளை நடைபெறவுள்ள இந்த முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி அதிரடியாக விளையாட வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். அதிலிருந்து நம்பிக்கையை எடுத்துக் கொண்டு இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
Summary
Smriti Mandhana has stated that the team needs to play aggressively in the match against Australia in the T20 World Cup tournament.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










