திருச்சி-சென்னை இடையே சனிக்கிழமை மட்டும் கூடுதல் விமான சேவையைத் தொடங்கியுள்ளது ஏர் அலையன்ஸ் விமான நிறுவனம்.
திருச்சி - சென்னை இடையே, ஏர் அலையன்ஸ், ஜெட், இண்டிகோ என மொத்தம் 3 விமான நிறுவனங்கள் சேவைகளை வழங்கி வருகின்றன. இதில், ஏர் அலையன்ஸ் தினசரி ஒரு சேவையும், ஜெட் இரு சேவைகளையும், இண்டிகோ 4 சேவைகளையும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஏர் அலையன்ஸ் நிறுவனம் சனிக்கிழமை மட்டும் கூடுதலாக ஒரு சேவையை தொடங்க திட்டமிட்டு சனிக்கிழமை (ஜூலை 21) முதல் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இரவு 7.45க்கு திருச்சி வரும் ஏர் அலையன்ஸ் விமானம் 8.30-க்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு 9.25க்கு சென்னையை சென்றடைகிறது. முன்னதாக தினசரி காலை 8.15-க்கு திருச்சி வரும் விமானம் 8.40-க்கு சென்னையை சென்றடைகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









