தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

செல்லிடப்பேசி கடை உரிமையாளர் வீட்டில் ரூ.40,000 திருட்டு

செல்லிடப்பேசி கடை உரிமையாளர் வீட்டில், ரூ. 40,000 , பொருள்களைத் திருடிச் சென்ற நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On :23 ஜூலை 2018, 8:48 am IST

செல்லிடப்பேசி கடை உரிமையாளர் வீட்டில், ரூ. 40,000 , பொருள்களைத் திருடிச் சென்ற நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள பணையக்குறிச்சி ஏ.ஆர்.கே. நகர் 
2 ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் (30). 
சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் செல்லிடப்பேசி விற்பனை மற்றும் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். 
கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு, தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்ற அவர் சனிக்கிழமை இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்புற கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. 
வீட்டினுள் சென்று பார்தபோது பீரோவிலிருந்த ரொக்கம் ரூ.40,000 மற்றும் சில பொருள்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.