ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரூ. 1 கோடி மோசடி: சேலம் அரிசி  வியாபாரி கைது

திருச்சியில் ரூ. 1 கோடி மோசடி செய்ததாக, சேலத்தைச் சேர்ந்த அரிசி வியாபாரியை திருச்சி குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:25 am

DIN

திருச்சியில் ரூ. 1 கோடி மோசடி செய்ததாக, சேலத்தைச் சேர்ந்த அரிசி வியாபாரியை திருச்சி குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருச்சி காந்திச்சந்தை - தஞ்சை சாலையில் அரிசிக் கடை வைத்திருப்பவர் அபுதாகிர் (32). அவரிடம்  சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த சதாசிவம் (32) என்ற நபர் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அரிசி கொள்முதல் செய்து வந்தார். அரிசி வாங்கிய வகையில் சுமார் ரூ. 1 கோடி வரையில் நிலுவை இருந்தது. இது குறித்து கேட்டபோது தொகையை தராமல் இழுத்தடித்து வந்தார். இதனையடுத்து அபுதாகிர் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகர குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையர் பரிந்துரைத்ததன் பேரில் குற்றப்பிரிவு உதவி ஆணையர் அருள்அமரன், ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சதாசிவத்தை போலீஸார் கைது செய்து திருச்சி மாவட்ட 5 ஆவது குற்றவியல் நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.