திருச்சியில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி காந்திமார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு மாற்றுவதால் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் வெகு தொலைவுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கள்ளிக்குடி பகுதியில் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை காந்திமார்க்கெட்டில் இருந்து சுமைத்தூக்கும் தொழிலாளர்கள், சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். பெரிய கடைவீதி பகுதியில் பேரணியாக சென்றனர். அப்போது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, பேரணியாக செல்ல அனுமதிஇல்லை என்றனர்.
இதனையடுத்து போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வட்டாட்சியர் அகிலா சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சு நடத்தினார். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இபிஎஸ்ஸின் பிரசாரம் ஒத்திவைப்பு! பிரதமருடன் இன்று சாலை வலம்!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

கவனம் ஈர்க்கும் பூ பாடல்!

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

