வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

மணப்பாறையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் சாவு

மணப்பாறையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் நிகழ்விடத்தில் உயிரிழந்தான்.

Updated On :5 நவம்பர் 2018, 9:16 am IST

மணப்பாறையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் நிகழ்விடத்தில் உயிரிழந்தான்.
திருச்சி மாவட்ம், மணப்பாறை அருகே வெள்ளைக்கல் வீராச்சி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். கார் மெக்கானிக்கான இவர் அப்பகுதியில் மெக்கானிக் பட்டறை நடத்தி வருகிறார். இவரது இளைய மகன் ஜார்ஜ்புஷ்(14)  அப்பகுதியில் உள்ள குழந்தைகளுடன் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தான். அருகே இருந்த வீட்டின் மாடிப்படிகளில் ஏறியபோது படிகளில் இருந்த இரும்பு கைப்பிடியில் மின் கசிவு இருந்துள்ளது. அதனையறியாத ஜார்ஜ்புஷ் இரும்பு கைப்பிடியை பிடித்த போது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்தில் இறந்தான்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மின்சார வாரிய ஊழியர்கள் மின் இணைப்பைத் துண்டித்தனர். 
இதுகுறித்து மணப்பாறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.