இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

திருச்சி விமான நிலையத்தில் ரூ.13.50 லட்சம் மதிப்பு வெளிநாட்டு சிகரெட், கரன்சிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.13.50 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், சிகரெட் பாக்கெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On :5 நவம்பர் 2018, 9:16 am IST

திருச்சி விமான நிலையத்தில் ரூ.13.50 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், சிகரெட் பாக்கெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருச்சி வந்த விமான பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருச்சியைச் சேர்ந்த நிசார்(34), நவாஸ்(44), சென்னையைச் சேர்ந்த பீர்முகமது(43), மைதீன்(38), ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிராஜூதீன்(48) ஆகிய 5 வியாபாரிகள் சுமார் 1,000 பொட்டலம் (ஒரு பொட்டலத்தில் தலா 10 சிகரெட்டுகள் கொண்ட 10 டப்பாக்கள்) வெளிநாட்டு சிகரெட் வகைகளை உரிய வரி செலுத்தாமல், அனுமதியின்றி முறைகேடாக கொண்டு வந்திருந்தனர். அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சமாகும். அதனைக் கைப்பற்றிய சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரன்சிகள் பறிமுதல்: அதேபோல, சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த கணேசனிடம் அதிகளவில் சோப் பாக்கெட்டுகள் இருந்தது. அவற்றின் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறையினர் சோதனையிட்டதில், சோப்புகளுக்குப் பதில் ஏராளமான யூரோ கரன்சிகளை வைத்து கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.3.50 லட்சமாகும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.