ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி சாவு

சமயபுரம் அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

Updated On :22 அக்டோபர் 2018, 4:21 am

சமயபுரம் அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
சமயபுரம் அருகே நடுஇருங்களூர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த வேணுகோபால் மகள் கீர்த்திகா(19). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கீர்த்திகா, அவரது பெரியப்பா மகன் க.முருகனுடன்(28) இரு சக்கர வாகனத்தில் கொள்ளிடம் டோல்கேட் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த கீர்த்திகா நிகழ்விடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த முருகன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சமயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.