அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

வையம்பட்டி அருகே ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு

வையம்பட்டி அருகிலுள்ள மட்டப்பாறைப்பட்டி அருள்மிகு பத்ரகாளியம்மன்  திருக்கோயில் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் இடிக்கப்பட்டன.

Updated On :13 பிப்ரவரி 2019, 9:39 am IST

வையம்பட்டி அருகிலுள்ள மட்டப்பாறைப்பட்டி அருள்மிகு பத்ரகாளியம்மன்  திருக்கோயில் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் இடிக்கப்பட்டன.
இக்கோயில் முன்பு இருந்த வணிக ரீதியிலான கடைகளுக்கு உயர் நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு மாற்று இடம் அளிக்கப்பட்டது.  ஆனாலும், சில கடைகளின் உரிமையாளர்கள் மீண்டும் பழைய இடத்திலேயே கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
 இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
அளிக்கப்பட்டும்  யாரும் ஆக்கிரமிப்பு செய்த கடைகளை அகற்றிக் கொள்ளவில்லை.  இதைத் தொடர்ந்து உதவி ஆணையர் ராணி தலைமையில், செயல் அலுவலர்கள் பிரபாகரன், ரவிச்சந்திரன், ராமநாதன், ஜெய்கிஷன், ஆய்வாளர்கள் உதயகுமார், பிரேமலதா, பரந்தாமன்  முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி  திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 
கோயில் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இரு கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டன. மீட்கப்பட்ட இடம் கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.