மதிமுக பொதுச் செயலர் வைகோ வருகையை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சொற்பொழிவில் உரையாற்றுவதற்காக வைகோ வந்தார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தி வருவதால், வைகோ வருகையின்போது பாரத் மாதா முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில பாரத இந்து மகா சபையினர் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி நுழைவு வாயில் முன்பு செவ்வாய்க்கிழமை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
வைகோ கார் வருவதையறிந்து அந்தப் பகுதியில் நின்றபடி பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்ட அகில பாரத இந்து மகா சபையின் மாவட்டத்தலைவர் ஆனந்தை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்! | Rajastan | Shorts

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


