சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

வைகோ வருகையை எதிர்த்து முழக்கமிட்ட இளைஞர் கைது

மதிமுக பொதுச் செயலர் வைகோ வருகையை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 9:38 am IST

மதிமுக பொதுச் செயலர் வைகோ வருகையை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சொற்பொழிவில் உரையாற்றுவதற்காக வைகோ வந்தார். 
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தி வருவதால், வைகோ வருகையின்போது பாரத் மாதா முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில பாரத இந்து மகா சபையினர் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி நுழைவு வாயில் முன்பு செவ்வாய்க்கிழமை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
வைகோ கார் வருவதையறிந்து அந்தப் பகுதியில் நின்றபடி பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்ட அகில பாரத இந்து மகா சபையின் மாவட்டத்தலைவர் ஆனந்தை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.