பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகிலுள்ள கார்குடியைச் சேர்ந்த சிஆர்பிஃஎப் வீரர் சிவசந்திரன் குடும்பத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் தெரிவித்து ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவரான தா.பழூர் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் குடும்பத்தினரை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், கார்குடி கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சிவசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவியை சிவசந்திரன் மனைவி காந்திமதியிடம் வழங்கினார்.
முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, ஆ. ராசா, மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா,திமுக மாவட்டச் செயலர் எஸ்.எஸ். சிவசங்கரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
.avif?w=256&q=65&auto=format%2Ccompress&fit=max)
செய்திகள் சில வரிகளில்...

மத்திய அரசுக்கு தொலைநோக்குப் பாா்வை இல்லை: காா்கே
தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்க முதல்வா் விஜய் ஆலோசனை

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல்: லெபனானில் உயிரிழப்பு 3,000-ஐ கடந்தது!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
