குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

திருச்சியில் 68.5 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு 68.5 கிராம் கடத்தல் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

Updated On :25 பிப்ரவரி 2019, 8:59 am IST

திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு 68.5 கிராம் கடத்தல் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு சனிக்கிழமை இரவு வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த மலேசியாவை சேர்ந்த சந்திரமூர்த்தி என்பவர் அனுமதியின்றி கொண்டு வந்த  ரூ. 2.29 லட்சம் மதிப்புள்ள 68.500 கிராம் தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல்,  திருச்சியிலிருந்து கோலாலம்பூர்  செல்லும் ஏர் ஏசியா விமான பயணிகளின் உடைமைகளை சோதனையிட்ட போது தஞ்சாவூரை சேர்ந்த கலைவாணன்(37) என்பவரிடமிருந்து அனுமதியின்றி வைத்திருந்த இந்திய பணம் 
ரூ.3 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.