திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு 68.5 கிராம் கடத்தல் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு சனிக்கிழமை இரவு வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த மலேசியாவை சேர்ந்த சந்திரமூர்த்தி என்பவர் அனுமதியின்றி கொண்டு வந்த ரூ. 2.29 லட்சம் மதிப்புள்ள 68.500 கிராம் தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல், திருச்சியிலிருந்து கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா விமான பயணிகளின் உடைமைகளை சோதனையிட்ட போது தஞ்சாவூரை சேர்ந்த கலைவாணன்(37) என்பவரிடமிருந்து அனுமதியின்றி வைத்திருந்த இந்திய பணம்
ரூ.3 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வித்தியாசமான கொண்டாட்டத்துக்குக் காரணம் அம்மாதான்... மனம் திறந்த சூர்யவன்ஷி!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகும் ராதிகா சரத்குமார்!

கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்






