குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

திருச்சியில் அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றம் ஆர்ப்பாட்டம்

புதிய தொழில் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 3:26 pm IST

புதிய தொழில் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாட்டின் இயற்கை வளங்களை அழித்து, கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகுக்கும் சட்டமான புதிய தொழில் கொள்கை திட்டத்தை திரும்ப பெற வேண்டும். ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி படிப்பு கனவை பாதிக்க கூடிய சட்டமான புதிய கல்விக் கொள்கை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில், இன்று நடைபெற்றது. 

திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெரு மற்ற மாவட்ட செயலர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏஐஎஸ்எப் மாநில துணை செயலாளர் ஜி.ஆர். தினேஷ் குமார்,  மாவட்ட செயலர் க.இப்ராஹிம், ஏஐஒய்எப் மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் சுதாகர், கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலர் பேராசிரியர் சதீஷ், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ராமராஜ், சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிவா உள்ளிட்ட 30 பேர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.