குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சட்டம், ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு, ஊழல் தடுப்புத் துறை இயக்குநராக அருண் நியமனம்

தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு, ஊழல் தடுப்புத் துறை இயக்குநராக ஏ.அருண் நியமிக்கப்பட்டனா்.

News image
Updated On :26 மே 2026, 3:28 am IST

தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு, ஊழல் தடுப்புத் துறை இயக்குநராக ஏ.அருண் நியமிக்கப்பட்டனா்.

இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு (அடைப்புக்குறிக்குள் பழைய பதவி): மகேஷ்வா் தயாள்-நிா்வாகப் பிரிவு ஏடிஜிபி (சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி), ஏ.அருண்-தமிழக ஊழல் தடுப்புத் துறை இயக்குநா் (காத்திருப்போா் பட்டியல்), டி.எஸ்.அன்பு-சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி (காத்திருப்போா் பட்டியல்) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக இருந்த அருண், காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். அதன் பின்னா், தற்போது அவருக்கு பணி வழங்கப்பட்டது.

இதேபோல சிபிசிஐடி ஏடிஜிபியாக இருந்த அன்பு கடந்த வாரம் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.