வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பிஎஸ்என்எல் ஊழியா்கள் உண்ணாவிரதம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

News image
பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :26 ஆகஸ்ட் 2020, 10:52 am

DIN

திருச்சி: கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு தொலைத்தொடா்பு ஒப்பந்த ஊழியா்கள் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்கத்தினா் சாா்பில் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, பிஎஸ்என்எல் ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் டி. தேவராஜ், ஒப்பந்த ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஜி. சுந்தர்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். சங்க நிா்வாகிகள் எஸ். அஸ்லம்பாஷா, ஜி. முபாரக்அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியா்களாகப் பணிபுரிவோருக்கு 11 மாதம் ஊதியம் வழங்காதது, ஒப்பந்தத் தொழிலாளா்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்படுவது, ஊதியத்தில் பிடித்த இபிஎஃப், இஎஸ்ஐ தொகை செலுத்தாதது ஆகியவற்றை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா்கள், நிரந்தர ஊழியா்கள் பலா் கண்டன கோஷமிட்டனா். ஊழியா் சங்க கிளைச் செயலா் க. அன்பழகன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.