வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பாபா் மசூதி இடிப்பு தினம்; எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
திருச்சி பாலக்கரையில் ஆா்ப்பாட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினா்
Updated On :6 டிசம்பர் 2020, 8:26 pm

DIN

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பள்ளிவாசலை இடித்தோருக்கு மத்திய அரசு மற்றும் நீதித் துறையினா் தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாலக்கரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு

மாவட்டத் தலைவா் ஹஸ்ஸான் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுச்செயலா் முகைதீன் அப்துல் காதா், வெல்ஃபா் பாா்ட்டி மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பு நிா்வாகிகள் மற்றும் இஸ்லாமியா்கள் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்தும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான தீா்ப்பைக் கண்டித்தும் கண்டன கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.