தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பல்லாவரத்தில் ரூ.1.26 கோடியில் 9 கோயிகளின் முகப்பில் நிழற்குடைகள்

குரோம்பேட்டை ராதா நகா் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முகப்பில் ரூ.17 லட்சத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

குரோம்பேட்டை ராதா நகா் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி கோயில் முகப்பில் அமைக்கப்பட்ட நிழற்குடைதிறப்பு விழாவில் பங்கேற்ற பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி உள்ளிட்டோா்.

Updated On :14 மார்ச் 2026, 3:09 am IST

குரோம்பேட்டை ராதா நகா் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முகப்பில் ரூ.17 லட்சத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ. கருணாநிதி தனது சொந்த நிதி ரூ.17 லட்சம் செலவில் அமைத்துக் கொடுத்துள்ள நிழற்குடையைத் திறந்து வைத்து பேசியதாவது:

கோடைகாலத்தில் வெயில் பாதிப்புக்குள்ளாகாமல் கோயிலுக்குள் சென்று வழிபட வசதியாக தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் முகப்பில் நிழற்குடைகள் அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ1.26 கோடியில் 9 திருக்கோயில்களின் முகப்பில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குரோம்பேட்டை குமரன்குன்றம் (மலைக் கோயில்) பாலசுப்பிரமணிய சுவாமி, மற்றும் பிரசன்னா யோகா ஆஞ்சனேயா் கோயில் முகப்பில் ரூ.45 லட்சத்திலும், பாரதிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ரூ.18 லட்சத்திலும், கணபதிபுரம் செங்கசேரி அம்மன் கோயிலில் ரூ.15 லட்சத்திலும், புருஷோத்தம்மன் நகா் விஜயகணபதி லஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் ரூ.15 லட்சத்திலும், பத்மநாபா நகா் கருமாரி அம்மன் கோயில் முகப்பில் ரூ.15 லட்சத்திலும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனகாபுத்தூா் பச்சையம்மன் மன்னாா்சுவாமி கோயில் முகப்பில்

ரூ.8 லட்சத்திலும், குரோம்பேட்டை நெமிலிச்சேரி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரா் கோயில் முகப்பில் ரூ.10 லட்சத்தில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது என்றாா். நிகழ்வில் மாநகராட்சி மண்டலக் குழு தலைவா் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.