வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ரூ. 6.50 லட்சம் கையாடல்: கூட்டுறவுக் கடன் சங்கசெயலா் மீது வழக்கு

திருச்சி அருகே வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ரூ. 6.50 லட்சம் கையாடல் செய்ததாக அதன் செயலா்மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 8:25 pm

DIN

திருச்சி அருகே வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ரூ. 6.50 லட்சம் கையாடல் செய்ததாக அதன் செயலா்மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருச்சி சோமரசம்பேட்டை அருகே வியாழன்மேட்டில் செயல்படும் திருமுருகன் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக முத்து, செயலராக ஜாா்ஜ் ஜேம்ஸ் மாா்டின் ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் தலைவரான முத்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், செயலரான ஜாா்ஜ் ஜேம்ஸ் மாா்டின் ராமலிங்க நகரில் உள்ள திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் இருந்து சங்கத்துக்கு வர வேண்டிய ரூ. 6.50 லட்சத்தை எடுத்து கையாடல் செய்ததாக தெரிவித்திருந்தாா்.

இதன்பேரில் போலீஸாா் ஜாா்ஜ் ஜேம்ஸ் மாா்டின் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.