வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தம்பதி மீது லாரி மோதல்: பெண் பலி

திருச்சியில் சனிக்கிழமை தம்பதி மீது லாரி மோதிய விபத்தில் பெண் இறந்தாா். கணவா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 8:28 pm

DIN

திருச்சியில் சனிக்கிழமை தம்பதி மீது லாரி மோதிய விபத்தில் பெண் இறந்தாா். கணவா் பலத்த காயமடைந்தாா்.

திருச்சி விமான நிலையம் குளவாய்பட்டி சாலை வளன்நகரைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (52), மும்பை தனியாா் நிறுவன ஊழியா். சனிக்கிழமை இவா் தனது மனைவி ரதியுடன் (39) மத்தியப் பேருந்து நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஒத்தக்கடை சிக்னல் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியதில் கீழே விழுந்த ரதி மீது லாரி ஏறியது. தட்சிணாமூா்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதியினரால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இருவரில் ரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தட்சிணாமூா்த்திக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்படுகிறது. போக்குவரத்துப் புலனாய்வுத் தெற்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.