விவசாய சங்கத் தலைவருக்கு மீண்டும் வீட்டுக்காவல்: கண்டித்து எலிக் கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்
விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை கண்டித்து சங்க நிர்வாகிகள் எலிக் கறி சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை கண்டித்து சங்க நிர்வாகிகள் எலிக் கறி சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தில்லியில் போராட்டம் நடத்த செல்வதைத் தடுக்கும் வகையில் கடந்த 24ஆம் தேதி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
பின்னர் போராட்டம் நடத்திய அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், திங்கள்கிழமை திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டில் அவர் மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சொந்த வேலையாக செல்வதாக இருந்தாலும் காவலல் வாகனத்தில் அழைத்துச் செல்வதாகவும் காவல்துறையினர் நெருக்கடி தருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனை கண்டித்து விவசாய சங்க நிர்வாகிகள் அய்யாக்கண்ணு வீட்டு அருகே உள்ள கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு எலிக்கறி சாப்பிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...