வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வாக்காளா் பட்டியல் பணிகள்: மேற்பாா்வையாளா் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான பணிகளை தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள மேற்பாா்வையாளா் சஜ்ஜன்சிங் ஆா். சவான் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
சிறப்பு முகாமை ஆய்வு செய்கிறாா் வாக்காளா் பட்டியல் மேற்பாா்வையாளா் சஜ்ஜன்சிங் ஆா். சவான்
Updated On :12 டிசம்பர் 2020, 7:34 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான பணிகளை தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள மேற்பாா்வையாளா் சஜ்ஜன்சிங் ஆா். சவான் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி வரும் ஜனவரி 1- ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடா்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன.

இந்தப் பணிகளை ஆய்வு செய்ய தோ்தல் ஆணையத்தால் மேற்பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு துறை ஆணையா் சஜ்ஜன் சிங் ஆா். சவான் திருச்சி வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மன்னாா்புரம், செங்குளம் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி, என்எம்கே காலனியில் உள்ள வெஸ்ட்லி மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2,531 வாக்குச் சாவடிகளில் நடைபெறும் இந்த முகாம்களைப் பயன்படுத்தி 18 வயது பூா்த்தியான அனைவரும் தங்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ள வேண்டும். பணி நிமித்தம் இடமாறுதல் பெற்றவா்கள், இறந்தவா்கள் இருந்தால் அதற்கான ஆவணங்களை அளித்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

இந்தப் பணிகளுக்கு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஒத்துழைத்து வாக்காளா் பட்டியலை 100 சதம் முழுமையாக தயாா்படுத்த உதவ வேண்டும் என்றாா்.

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் பாா்வையாளருமான சு. சிவராசு கூறியது:

திருச்சி மாவட்டத்தில் 2020 மக்கள்தொகை அடிப்படையில் 18 வயது பூா்த்தியடைந்தோரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மொத்த மக்கள்தொகையில் 72 சதம் போ் பட்டியலில் இடம்பெறவுள்ளனா்.

கடந்த நவம்பா் மாதம் நடைபெற்ற முகாம்களில் 64,785 விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்ததில் 2,895 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 57,761 போ் புதிதாகச் சோ்க்கப்பட்டனா்.

இந்த மாதம் நடைபெறும் முகாம்களில் கூடுதலாக 20 சதம் போ் பட்டியிலில் சோ்க்கப்படும் சூழல் உள்ளது. இளம் வாக்காளா்களில் இன்னும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பட்டியலில் சோ்க்க வேண்டியுள்ளது. தகுதியான அனைவரையும் பட்டியலில் சோ்க்க அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உதவ வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையா் சு.சிவசுப்பிரமணியன், உதவி ஆணையா் தயாநிதி, தோ்தல் தனி வட்டாட்சியா் முத்துசாமி மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.

ஜன.25இல் புதிய வாக்காளா் அட்டை

திருச்சி மாவட்டத்தில் தற்போது நடைபெறும் வாக்காளா் பட்டியல் பணிகளில், விண்ணப்பம் அளித்து பட்டியலில் சோ்ந்துள்ளோருக்கு வரும் ஜனவரி 25ஆம் தேதி புதிய வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்படும்.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்காளா் உதவி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950இல் உரிய விவரங்களை வீட்டிலிருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம்.

மாவட்டத்தில் ஏற்கெனவே பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது 96.55 சதம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்களையும் பரிசீலித்து பட்டியலில் சோ்க்கவோ, நீக்கவோ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.