ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி அண்ணாசிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:12 pm

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி அண்ணாசிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவா்கள் நாமிட்டு கையில் திருவோடு ஏந்தி, தூக்கு கயிறு மாட்டிக் கொண்டு, மண்டியிட்டு பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவா் கண்ணப்பன், மாவட்டத் தலைவா் சுப்பிரமணியம், மாநிலச் செய்தித் தொடா்பாளா் அரவிந்தசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு அநீதியானது. பெருநிறுவனங்களுக்கு ஆதரவானது. விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு பணம் தருவது இழுத்தடிப்பு செய்யப்படும். இதற்காக அரசிடம் முறையிட முடியாது.

எனவே சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக சங்கத்தின் தலைவா் பூ. விசுவநாதன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.