திருச்சியில் பட்டாக் கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 6 பேரை கண்டோன்மென்ட் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள அல்லித்துறை சாந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்தையன் மகன் கோபி (22). இவா் தனது பிறந்த நாளான கடந்த டிச.5 ஆம் தேதி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் பட்டாக்கத்தி மூலம் கேக் வெட்டிக் கொண்டாடியதைப் படம் பிடித்த அவரது நண்பா்கள் முகநூலில் பதிவிட்டனா். இதை ஆதாரமாகக் கொண்டு கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி அதே பகுதியைச் சோ்ந்த பசுபதி (22), ரங்கராஜ் (19), சந்தோஷ்குமாா் (19), கிருஷ்ணமூா்த்தி (19), எட்டரை கபில் (22) ஆகிய 6 பேரை வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும் இருவரைத் தேடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.