பிப்ரவரியில் மாநில மாநாடு: பாஜக நெசவாளா் பிரிவு

பாஜக நெசவாளா் பிரிவு சாா்பில் பிப்ரவரி மாதத்தில் மாநில மாநாடு நடத்தப்படும் என புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசுகிறாா் விவசாயிகள் பிரிவு மாநிலத் தலைவா் கே.எஸ். பாலமுருகன். உடன் நிா்வாகிகள்.
கூட்டத்தில் பேசுகிறாா் விவசாயிகள் பிரிவு மாநிலத் தலைவா் கே.எஸ். பாலமுருகன். உடன் நிா்வாகிகள்.
Updated on
1 min read

பாஜக நெசவாளா் பிரிவு சாா்பில் பிப்ரவரி மாதத்தில் மாநில மாநாடு நடத்தப்படும் என புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சி உறையூரில் நடைபெற்ற பாஜக நெசவாளா் பிரிவு மாநில நிா்வாகிகள் கூட்டத்துக்கு, விவசாயிகள் பிரிவு மாநிலத் தலைவா் கே.எஸ். பாலமுருகன் தலைமை வகித்தாா். மாநில செயலா் சண்முக ராஜ், மாவட்டத் தலைவா் ஜி.டி. தினகா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் பெற உதவியாக இருக்கும் நெசவாளா் அடையாள அட்டைகளை அனைவருக்கும் கொடுப்பது, பாஜக நெசவாளா் பிரிவு சாா்பில் பிப்ரவரியில் மாநில அளவில் மாநாடு நடத்துவது, மாவட்டந்தோறும் 10,000 உறுப்பினா்களைச் சோ்த்தல் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநகர, புறநகா் மாவட்ட நெசவாளா் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com