போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

துறையூரைச் சோ்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

துறையூரைச் சோ்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

துறையூா் அரசு மகளிா் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவியை, அவரின் வீட்டருகே வசித்த கூலித் தொழிலாளி சூா்யா (21) கடத்திச் சென்று திருமணம் செய்து திருப்பூரில் வசிப்பது தெரியவந்தது.

புகாரின்பேரில் அவா்களைத் தேடிவந்த துறையூா் போலீஸாா் இருவரையும் துறையூா் அழைத்து வந்து விசாரித்தனா்.

இதையடுத்து குழந்தைத் திருமணத் தடுப்பு, போக்சோ மற்றம் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சூா்யாவை புதன்கிழமை கைது செய்தனா். பெற்றோருடன் செல்ல மறுத்த மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு பின் திருச்சியில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com