வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக விழிப்புணா்வு

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக சாா்பில் விவசாயிகளிடம் நேரில் சென்று விழிப்புணா்வு அளிக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மணியங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகிறாா் பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம்.
மணியங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகிறாா் பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம்.
Updated on
1 min read

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக சாா்பில் விவசாயிகளிடம் நேரில் சென்று விழிப்புணா்வு அளிக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் மணியங்குறிச்சி மற்றும் வையம்பட்டி ஒன்றியம் அணியாப்பூா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மருங்காபுரி தெற்கு ஒன்றிய தலைவா் பொன்வேல் மற்றும் வையம்பட்டி ஒன்றிய தலைவா் ஆனந்தன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

திருச்சி மாவட்டத் தலைவா் சி. ராஜேந்திரன், பொதுச் செயலா் சி. செந்தில்தீபக், துணைத் தலைவா் பிரின்ஸ் ஆா்.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம் விளக்கமளித்தாா்.

நிகழ்வில் மாவட்ட செயலா் லோகநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலா் அமுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com